இன்குலாப் ! கவிஞர் இரா .இரவி !
அதிகம் படைக்கவில்லை என்றாலும்
அழுத்தமாகப் படைத்தவன்
இன்குலாப் !
யார் கவிஞன் என்றால்
நீயே கவிஞன் என்றானவன்
இன்குலாப் !
பாரதி போலவே
எழுதியது போல வாழ்ந்தவன்
இன்குலாப் !
அஞ்சாமையின் குறியீடு நீ
சமரசம் செய்யாத கொள்கையாளன் நீ
இன்குலாப் !
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலில்
என்றும் ஒலிக்கும் உன்கவிதைகள்
இன்குலாப் !
மறைவு உன் உடலுக்குத்தான்
மறைவு இல்லை உன் கவிதைகளுக்கு
இன்குலாப் !
ஈழத்தமிழருக்காக மனிதாபிமானக்
கவிதைகள் யாத்தவன்
இன்குலாப் !
ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும்
அதனை கவிதை வடிவில் எதிர்த்தவன்
இன்குலாப் !
யாருக்கும் துதி பாடாதவன் நீ
அதனால் உன் துதி பாடுகின்றேன்
இன்குலாப் !