ராமநாதபுரம் அருகே கிராமத்தில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாக 19 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் அருகே பேராவூரில் முனியய்யா கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்கெனவே இருதரப்பினரிடையே மோதல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ரவிசந்திரன் (48), பிரகதி (26) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இருதரப்பிலும் அளித்தப் புகாரின் பேரில் ஒரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீதும் கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: தினமணி
(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.
Source link